இலங்கை செய்தி

ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பயணத்தடையின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எனினும், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினார் என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!