இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

நியூ மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு; மூன்று பேர் கொல்லப்பட்டனர்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவின் லாஸ் குரூஸில் உள்ள யங் பார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அங்கீகரிக்கப்படாத கார் கண்காட்சியின் போது குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 16 வயது சிறுவன் ஒருவனும் 19 வயது சிறுவனுமான இருவர் கொல்லப்பட்டனர்.

அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

துப்பாக்கிச் சூடு ஒரு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக லாஸ் குரூஸ் காவல்துறைத் தலைவர் ஜெர்மி ஸ்டோரி தெரிவித்தார்.

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அந்தப் பகுதியில் காவல்துறையினரின் பிரசன்னமும் குறைவாகவே இருந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

(Visited 29 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!