இலங்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பராமரிப்பிற்காக கப்பல் ஒன்றை வாடகைக்கு வாங்க நடவடிக்கை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பராமரிப்பு மற்றும் துரித பதிலளிப்பிற்காக கப்பலொன்றை வாடகைக்குப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறையைப் பின்பற்றி வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக 2022.11.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதன்படி  அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய 2023.06.01 தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை அடிப்படையில் பராமரிப்பு மற்றும் துரித பதிலளிப்புக் கப்பலொன்றை பணியில் அமர்த்துவதற்கான ஒப்பந்தம் எம்.எஸ். இலங்கை கப்பல் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த யோசனையை  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த நிலையில், அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!