இலங்கை தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம் தொடர்பில் முக்கிய தகவல்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு வரி அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு 15 வீதம் வரி அறிவிடப்படும் என போலியான தகவல்கள் வெளியிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படும் நிலையில், அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் போலியாக பரப்பப்படுவதாகவும் இது தொடர்பாக போலியான செய்தி வெளியிட்ட தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வருமானம் ஈட்டுவோருக்கு எதிராக வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கும் சலுகை அடிப்படையிலேயே வரி விதிக்கப்படவுள்ளது. 150,000 ரூபாவுக்கும் குறைவான வருமானத்தை பெறும் டிஜிட்டல் செயற்பாட்டர்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.