இந்தியா

இந்தியா – திருமண விழாவில் நடனமாடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்த 23 வயது பெண்

மத்தியப்பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியின்போது நடனமாடிக்கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்தார்.அவர், இந்தூரில் வசித்து வந்த எம்பிஏ பட்டதாரியான பரிணிதா ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விதிஷா மாவட்டத்துக்கு வந்திருந்தார்.

200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட ‘ஹல்தி’ விழாவில் பரிணிதா மேடையில் நடனமாடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

‘லெஹ்ரா கே பால்கா கே’ என்ற பாலிவுட் பாடலுக்குப் பரிணிதா நடனமாடிக்கொண்டிருந்தபோது, ​​சனிக்கிழமை இரவு மேடையில் அவர் திடீரென சரிந்து விழுந்தார்.

விழாவில் கலந்துகொண்ட மருத்துவர்களான குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு ‘சிபிஆர்’ எனப்படும் முதலுதவி சிகிச்சையை அளித்தனர். இருப்பினும், சிகிச்சையால் பலனில்லை.

அதிகாரபூர்வ தகவல்களின்படி, பரிணிதாவின் இளைய சகோதரர்களில் ஒருவரும் 12 வயதில் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.இருப்பினும், மத்தியப் பிரதேசத்தில் இசைக்கு நடனமாடியவர்கள் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் இது முதல் முறையல்ல.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே