ஆசியா

அதிக நேரம் கழிப்பறையில் நேரம் செலவழித்த ஊழியர்கள்… வித்தியாமான முறையில் தண்டனை வழங்கிய சீன நிறுவனம்!

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள லிக்சன் டியான்ஷெங் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில், பணியாற்றும் ஊழியர்கள் கழிவறைக்குச் சென்றுவர நீண்டநேரம் எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை அளித்துள்ளது. அதாவது, அவர்கள் கழிவறையில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை எடுத்து சுவரில் ஒட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். பயனர் ஒருவர், “அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஊழியர்களின் தனியுரிமைக்கு எதிரான தெளிவான மீறல்” எனப் பதிவிட்டார். மற்றொருவர், ”கண்காணிப்பு கேமராக்களை தவறாக பயன்படுத்தியதற்காக நிறுவனம் தண்டிக்கப்பட வேண்டும்” எனவும், வேறொருவர், “ஊழியர்கள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர வேண்டும்” எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர். இதையடுத்து, அந்த நிறுவனம் சுவரில் ஒட்டியிருந்த புகைப்படங்களை நீக்கியது.

 

(Visited 3 times, 3 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்