இலங்கை

பாடசாலை மாணவியின் குடிநீர் போத்தலுக்குள் கலந்திருந்த சிறுநீர்!

கிளிநொச்சியில் முன்னணி கலவன் பாடசாலையொன்றில் கல்விகற்கும் மாணவியின் குடிநீர்ப் போத்தலில் சிறுநீர் கலந்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், கடந்த 9ஆம் திகதி நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சிறுநீர் கலந்திருப்பதை அறியாத மாணவி அதனை பருகியுள்ளார். நீரை பருகிய போது அதில் வித்தியாசத்தை உணர்ந்த மாணவி சந்தேகமடைந்து, குடிநீர் போத்தலை ஆசிரியையிடம் கொண்டு சென்று காட்டியுள்ளார்.

தனது குடிநீரின் நிறம் மாறியுள்ளதுடன், குடிநீர் அளவும் அதிகரித்திருந்ததாக மாணவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஆசியை குடிநீரை விரலால் தொட்டு தனது நாக்கில் வைத்து பரிசோதித்தார்.அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொதுச்சுகாதார பரிசோதகருக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட சோதனையில், குடிநீர் போத்தலில் சிறுநீர் கலந்திருந்தது தெரிய வந்துள்ளது.

Page 2 | Water Testing Images - Free Download on Freepik

 

அதேவேளை மாணவர் தலைவராக செயற்படும் மாணவியொருவர், வகுப்பறையில் மிக கண்டிப்பாக செயற்படுபவர் என்றும், அவரது கண்டிப்பினால், மாணவர்கள் சிலர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்நிலையில் மாணவிகள் பாடமொன்றுக்காக வகுப்பறைக்கு வெளியில் சென்றபோதே யாரோ அவரது போத்தலில் சிறுநீரை கலந்து வைத்திருக்ககூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

See also  இலங்கையில் வரி செலுத்தும் மக்களுக்கான இறுதி அறிவிப்பு

மாணவர் தலைவி வெளியிலிருந்து மீண்டும் வகுப்பறைக்கு திரும்பிய பின்னர், தனது குடிநீர் போத்தலில் இருந்த தண்ணீரை குடித்தபோதே இந்த சம்வம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. தரம் 10 இல் படிக்கும் மாணவியொருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content