இலங்கை

இலங்கை : தாமரை கோபுரத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

தாமரை கோபுரத்தில் நேற்று (09.11) துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் இசைக் குழுவுடன் தொடர்புடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் அல்லது நபர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் இசை நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவில் இருந்தவர் என்றும், கோபுர நிர்வாகத்துடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் லோட்டஸ் டவர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!