மத்திய கிழக்கு

மத்திய கிழக்கில் அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

மத்திய கிழக்கு வட்டாரத்தில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்கா இராணுவ பலத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

நீண்ட தூரம் சென்று குண்டுகளை வீசக்கூடிய போர் விமானம், ஏவுகணைகளை அழிக்க உதவும் பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவற்றையும் அமெரிக்கா அவ்வட்டாரத்தில் குவித்து வருகிறது.

ஈரான்- இஸ்ரேல் இடையே கடுமையான போர் நிலவுகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஒன்று மற்றொன்றின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க தற்போது தனது படை பலத்தை அதிகரித்துள்ளது.

ஈரானும் அதன் கூட்டாளிகளும் அமெரிக்காவையோ அதன் நட்பு நாடுகள் மீதோ தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த மாதமும் இதுபோன்ற நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. அதன் தரைப்படை வீரர்கள் பலரை மத்திய கிழக்கு வட்டாரத்திற்கு அது அனுப்பியது. இனிவரும் மாதங்களில் அமெரிக்கப் படையினர் அதிக அளவில் மத்திய கிழக்கு வட்டாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

(Visited 41 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!