மத்திய கிழக்கு

காஸாவில் இஸ்‌ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பாலஸ்தீனர்கள் மரணம்

காஸா முனையெங்கும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியதில் அக்டோபர் 30ஆம் இகதியன்று குறைந்தது 20 பாலஸ்தீனர்கள் உயிரிழந்த்தாக காஸாவில் உள்ள மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.

காஸாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

அந்த இடத்துக்கு அருகில் அக்டோபர் 29ஆம் திகதியன்று இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 93 பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போனதாக காஸா சுகாதார அமைச்சு கூறியது.

அந்தத் தாக்குதல் மிகவும் மோசமானது, பயங்கரமானது என்று அமெரிக்கா சாடியது.இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்‌ரேல் கருத்து தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, காஸாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் விளைவாகக் குறைந்தது ஏழு பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

காஸாவின் ஷேக் ரட்வான் குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஐவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

(Visited 38 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.