செய்தி விளையாட்டு

இந்திய டெஸ்ட் தொடருக்கு முன் பதவி விலகிய நியூசிலாந்து கேப்டன்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டனான டிம் சவுதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அடுத்த கேப்டன் யார் என்று குழம்பியுள்ளனர்.

வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இதன் மூலமாக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18வது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

2வது டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, வெறும் 6 செஷனில் ஒரு போட்டியை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பயணத்தில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அக்.16ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

See also  அநுரவின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை - அரசாங்கத்தில் புதிய பதவிகள்

முதல் டெஸ்ட் போட்டி அக்.16ஆம் திகதி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி அக்.24ஆம் திகதி புனே மைதானத்திலும், கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்திலும் நடக்கவுள்ளது.

இதனால் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேச டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் சவுதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுவரை நியூசிலாந்து அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 382 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் டிம் சவுதி.

கேன் வில்லியம்சன் 2022ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின், அந்த பொறுப்புக்கு டிம் சவுதி வந்தார்.

நியூசிலாந்து அணியை 14 போட்டிகளில் வழிநடத்திய டிம் சவுதி, 6 வெற்றி, 6 தோல்வி, 2 டிராவுடன்

See also  அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தோழியை தாக்கிய மாணவி

பயணத்தை முடித்து கொண்டுள்ளார். இதுகுறித்து டிம் சவுதி பேசுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டதை பெருமையாக உணர்கிறேன்.

எப்போதும் நியூசிலாந்து அணியின் வெற்றியை முன்னிலைப்படுத்தியே இயங்கி வந்துள்ளேன். இந்த முடிவும் அணியின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது தான்.

தொடர்ந்து நியூசிலாந்து அணியின் பவுலராக செயல்பட்டு, வெற்றிக்கு நிச்சயம் பங்களிப்பேன். இளம் வீரர்களுக்கு உதவியாக இருப்பேன்.

அதேபோல் எனக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்க உள்ள டாம் லேதமுக்கு வாழ்த்துகள்.

கடந்த சில ஆண்டுகளாக லேதம் எனக்கு எவ்வளவு உதவியாக இருந்தாரோ, அதே அளவிற்கு அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக நியூசிலாந்து அணியின் அடுத்த கேப்டனாக டாம் லேதம் பொறுப்பேற்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு அவர் தான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது 3 வடிவங்களிலும் நியூசிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார்.

டிம் சவுதியின் முடிவுக்கு பின், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் அடைந்த தோல்வியே காரணமாக பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content