செய்தி

Energy Drinks குடிப்பவர்களுக்கு ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Energy Drinks எனப்படும் பானங்களில் மறைந்திருக்கும் ஆபத்துகள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Energy Drinksகளில் caffeine செறிவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு நாளைக்கு ஒரு நபர் குடிக்க வேண்டிய அளவு caffeine இருப்பதால், அதை விட அதிகமாக பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று வலியுறுத்தப்படுகிறது.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவி பேராசிரியரான லீனா வென், எவ்வளவு caffeine உட்கொள்வது பொருத்தமானது என்பது குறித்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

உணவுத் தரம் தொடர்பான சட்டங்களின்படி, 100 மில்லி எனர்ஜி பானங்களில் உள்ள caffeine அளவு 32 மில்லி கிராமிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதாவது, 250 மில்லி லிட்டர் எனர்ஜி ட்ரிங்கில் 80 மில்லி கிராமுக்கு மேல் caffeine இருக்கக்கூடாது.

மேலும், ஆற்றல் பானங்கள் மற்றும் விளையாட்டு பானங்கள் என இரண்டு வகைகளை வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிக ஆற்றல் பானத்தை குடிப்பது ஆபத்தானது, ஏனெனில் அதில் அதிக அளவு caffeine உள்ளது, மேலும் அதிகப்படியான caffeine உட்கொள்வதன் மூலம் இதய துடிப்பு அதிகரிப்பு, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content