இலங்கை : பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு கோரிக்கை!
பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கூட்டம் ராஜகிரியில் உள்ள பொதுத் தேர்தல் செயலக வளாகத்தில் இன்று (30.07) காலை நடைபெற்றது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பிலான பல விடயங்கள் தொடர்பில் அந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.





