செய்தி விளையாட்டு

மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

8 அணிகள் இடையிலான 9வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், யு.ஏ.இ அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வரும் 19ம் தேதி யு.ஏ.இ – நேபாளம் அணிகள் மோத உள்ளன.

அன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விவரம்: 

சமாரி அத்தபத்து (கேப்டன்), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதனி, அச்சினி குலசூரிய, இனோஷி பிரியதர்ஷனி, காவ்யா கவின்தினி, சச்சினி நிசான்சலா, ஷாஷினி ஹிம்ஹானி, அமா காஞ்சனா.

 

(Visited 48 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!