இலங்கை செய்தி

குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

குணதிலக்க ராஜபக்ஷ எம்.பியை தாக்கியதாக ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் நாமாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, தன்னை தாக்கி காலில் பலத்த காயம் ஏற்படுத்தியதாக தெரிவித்து அவரது மகனுடன் இணைந்து குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எனினும், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தாம் வன்மையாக மறுப்பதாகத் தெரிவித்த திரு அளுத்கமகே, அந்த இருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இன்று (14) நாவலப்பிட்டி பிரதேசத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(Visited 18 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!