இலங்கை செய்தி

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

மியன்மாரில் பயங்கரவாத முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இன்று (08) இரவு நாடு செல்ல தயாராகி வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் பிடியில் உள்ள பகுதியில் இலங்கை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு கணினி குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுவது சில தினங்களுக்கு முன்னர் தெரியவந்தது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!