ஐரோப்பா

சுவிஸில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு: வெளியான முக்கிய தகவல்!

சுவிட்சர்லாந்தில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கொரோனா தொடர்பில் முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன.

சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சில பகுதிகளில் மறைவான கொரோனா அலை ஒன்று பரவிவருவதாக தெரிவித்துள்ளன.

கழிவுநீரில் காணப்படும் கொரோனா வைரஸின் அளவு, 2022 கோடை மற்றும் கடந்த இலையுதிர்காலத்தில் காணப்பட்டதைவிட அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும், Aargau மகாணம்தான் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் தற்போது கொரோனா பரிசோதனையே அபூர்வமாகிவிட்டதால், எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் குறித்த மிகச்சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!