யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் ஏற்பட்ட பயங்கரம்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது.இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ அருகில் உள்ள சிறிய கடையொன்றிற்கு பரவியுள்ள நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறுது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் குறித்த கடை முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 9 times, 1 visits today)