செய்தி விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு யார் கேப்டன் பொறுப்பில் இருப்பார்கள் என அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

வரும் 22-ம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இத்தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டே ஓய்வு பெறுவார் என எண்ணப்பட்ட மகேந்திரசிங் தோனி, இந்த ஆண்டும் விளையாடுவார் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 42 வயதான தோனிக்கு இதுவே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்காகவே ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் சற்று கவலை அடைந்தாலும், அவருக்கு பின் அணியை யார் வழிநடத்தப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நேற்று கூறுகையில்,”கேப்டன், துணை கேப்டன் நியமனம் பற்றி பேச வேண்டாம். அதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் விட்டுவிடுங்கள்” என்றார். எனவே ”தோனி அடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் யார் என்பதை முடிவு செய்து என்னிடம் தகவல் சொன்ன பிறகு அதை உங்களிடம் தெரிவிக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்வாட் அணியை வழிநடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி