Skip to content
August 15, 2025
Follow Us
இலங்கை

சர்வதேச ரீதியில் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட 43 இலங்கையர்கள்

இலங்கையில் செயற்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட மற்றும் தேடப்படும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் சிவப்பு நோட்டீஸ்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் தஞ்சம் புகுந்த தேடப்படும் குற்றவாளிகள் தற்போது வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, துபாய்க்கு தப்பிச் சென்ற தேடப்படும் குற்றவாளிகள் போலி அடையாளங்களில் புதிய பாஸ்போர்ட்டை உருவாக்கி வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார்

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்