ஐரோப்பா

சுவிட்ஸர்லாந்தில் ஒரே நாளில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

சுவிட்ஸர்லாந்தின் சூரிச்சில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இரு விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்று Place de la Gare அருகே மற்றொன்று Altstetten district மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை, இரவு 7 மணி அளவில் சூரிச்சில் உள்ள Place de la Gare நோக்கிச் சென்ற டிராம் ஒன்றின் கீழ் சென்ற பாதசாரி ஒருவர் தனது உயிரை இழந்தார்.

விபத்தில் சிக்கியவரை காப்பா்ற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவரது காயங்கள் மிகவும் கடுமையாக இருந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்தையடுத்து போக்குவரத்து முற்றாக முடங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து சூரிச் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மற்றும் நம் அனைவரையும் வருத்தப்பட வைத்துவிட்டதென சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சற்று முன் மற்றொரு டிராம் விபத்து ஏற்பட்டது. Altstetten இல் உள்ள Aargauerstrasse இல் 27 வயது சைக்கிள் ஓட்டுநர் விபத்துக்குள்ளானார்.

இதில் அந்த இளைஞன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில் சனிக்கிழமை காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content