இந்தியா

இந்தியாவின் உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் இரு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேர்ஸ் மாவட்டமான பித்தோராகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வாகனம் ஒன்று 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரு குழந்தைகள் உள்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர், அறுவர் காயமடைந்தனர்.

“14 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று முவானி கிராமத்தில் சுனி பாலம் அருகே விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அந்த இடத்தை அடைந்த காவல்துறையினர் நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,” என்று பித்தோராகர் காவல்துறையின் ரேகா யாதவ் கூறினார்.

உள்ளூர் கிராம மக்கள் மீட்பு நடவடிக்கையில் உதவினர். காயமடைந்தவர்கள் பள்ளத்தாக்கிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பித்தோராகர் சாலை விபத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 50,000மும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content