செய்தி

வங்காளதேசத்தில் பஸ்சில் சிலிண்டர் வெடித்து 7 பயணிகள் உடல் கருகி சாவு

வங்காளதேசத்தில் பஸ்சில் சிலிண்டர் வெடித்து 7 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வங்காளதேசத்தின் மத்திய பரித்பூர் பகுதியில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி கியாசில் இயங்கும் மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் அந்த பஸ்சின் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content