உடன்படிக்கைக்கு அமைய பணயக்கைதிகளை விடுக்கும் ஹமாஸ்
மத்திய கிழக்கில் பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கைக்கு அமைய 7 பணயக்கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இது தொடர்பாக இஸ்ரேலிய அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் 20 பணயக்கைதிகளையும் 28 உயிரிழந்தவர்களின் உடல்களையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலிய அமைச்சரவை 1,718 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னர் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை 1,722 ஆக இருந்தது, ஆனால் இப்போது அது 1,718 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கைதிகள் பரிமாற்றம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)





