இலங்கை செய்தி

கண்டியில் 65 மணிநேர நீர் வெட்டு – நீரை சேமிக்க அறிவுறுத்தல்

பொல்கொல்ல வடிகால் அணையின் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக கண்டியின் பல பகுதிகளில் சனிக்கிழமை (28) முதல் 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (28) அதிகாலை 1 மணிக்கு நீர்வெட்டு ஆரம்பமாகி, திங்கட்கிழமை (30) காலை 6 மணிக்குள் சீரமைக்கப்படும்.

பாதிக்கப்படும் பகுதிகள் –

கண்டி மாநகரசபை பகுதி, ஹரிஸ்பத்துவ, புஜாபிட்டிய, பாததும்பர, மற்றும் அக்குரண நீர் விநியோக அமைப்பின் கீழ் உள்ள பகுதிகள்.

ராஜவெல்ல, சிறிமல்வத்த, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தானை, மற்றும் வளல உள்ளிட்ட குண்டசாலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

பெரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (GKWTP) திட்டத்தின் கீழ் மாவத்தகம பிரதேசங்கள்.

இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் குறுக்கீட்டின் போது தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(Visited 40 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை