இலங்கை

இலங்கையில் 62,000 பேரை அரச சேவையில் சேர்ப்பதற்கு தயாராகும் ஜனாதிபதி அநுர

கிட்டத்தட்ட 62,000 பேரை அரச சேவையில் சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

25வது தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

“நாங்கள் மொத்தமாக ஆட்சேர்ப்பு செய்யவில்லை. நாங்கள் ஒரு லட்சம், ஒன்றரை லம்சம் பேரை ஆட்சேர்ப்பு செய்யவில்லை.

எனினும் அரச சேவையை பராமரிக்க தேவையான 62,000 பேரை நாடு முழுவதும் அடையாளம் கண்டுள்ளோம்.

இந்த 62,000 பேரை விரைவில் அரசாங்க சேவையில் சேர்க்குமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் வேலைவாய்ப்பு பிரச்சினை அங்கிருந்து தீர்க்கப்படுமா? அது அங்கிருந்து தீர்க்கப்படாது.

ஆனால் இந்த அரசாங்கம் அரசாங்க செயல்முறை மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம்.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!