இரத்தினபுரியில் தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; ஒருவர் கைது
இரத்தினபுரி – அயகம, சமருகம பகுதியில் அயலவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சமருகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவருக்கும் அவரது அயலவர் ஒருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





