உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உள்பட 500 கொரிய துருப்புக்கள் பலி!
கடந்த வாரம் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கணக்கான வட கொரிய துருப்புக்கள் மற்றும் ஒரு ரஷ்ய ஜெனரல் ஒருவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் புயல் நிழல் ஏவுகணையை பயன்படுத்தி இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரஷ்ய ஜெனரல் உள்பட 500 கொரிய துருப்புகள் கொல்லப்பட்டதாகவும் 18 பேர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
துல்லியமான ஏவுகணைகள் புட்டினின் கட்டளை நிலை மற்றும் இராணுவ வசதிகளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்பதுடன், சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்களே இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 50 times, 1 visits today)





