ஆசியா

சிங்கப்பூரில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட 5 வாகனங்கள்

சிங்கப்பூரில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

56 வயதான ட்ரக் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் ஜனவரி 29ஆம் தேதியன்று பிற்பகல் Choa Chu Kang Way இல் நடந்தது.

இந்த விபத்து குறித்து பிற்பகல் 2 மணி அளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் மூன்று கனரக வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மோதிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர்கள் கூறினர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!