ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் அல் ஜசீரா நிருபர்கள் அனஸ் அல்-ஷெரிப், முகமது கிரீக், கேமராமேன் இப்ராஹிம் ஜாஹர், மோமன் அலிவா மற்றும் முகமது நௌபால் ஆகியோர் அடங்குவர்.

அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல் நடத்தியதில் இறந்த ஏழு பேரில் அவர்களும் அடங்குவர் என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் அனஸ் அல்-ஷெரிப்பை குறிவைத்ததாக ஒப்புக்கொண்டது, நிருபரை “பயங்கரவாதி” என்று முத்திரை குத்தியது, அவர் “ஹமாஸில் ஒரு பயங்கரவாதப் பிரிவின் தலைவராக பணியாற்றியவர்” என்று குறிப்பிட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!