48 மணிநேரம் அவகாசம் – தொழில்நுட்ப நிறுவனங்களை எச்சரிக்கும் பிரித்தானியா!
பிரித்தானியாவில் புதிய சட்ட திருத்தத்தின் கீழ் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள், முறைப்பாடு அளிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் இணையத்தில் ஒருமித்த கருத்து இல்லாத நெருக்கமான படங்களை அகற்றுவதை கட்டாயமாக்கும்.
இதை பின்பற்றத் தவறினால் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கணிசமான அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இங்கிலாந்தில் அவர்களின் சேவைகள் தடுக்கப்படலாம்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் தொழில்நுட்ப செயலாளர் லிஸ் கெண்டல் ( Liz Kendall) ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆன்லைனில் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி தொழில்நுட்ப நிறுவனங்களின் “இலவச அனுமதி” முடிந்துவிட்டது என்று கூறினர்.
குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தைப் போலவே, போலி நிர்வாண படங்கள் மற்றும் சமூக ஊடகத் தடைகளை நிவர்த்தி செய்வது ஆகியவையும் இந்த சட்டத்தின் கீழ் கண்காணிப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





