இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம்

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழர்களின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 34 வது ஆண்டு நினைவு தினம் இன்று காலை வலி மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள அமரரது உருவச் சிலையடியில் இடம் பெற்றது.

இதன்போது அமரரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!