Site icon Tamil News

ருவாண்டாவில் மண் சரிவில் சிக்கி 136 பேர் பலி

ருவாண்டாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளனர். மலை பிரதேசங்கள் மழையினால் கடும் நிலச்சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழைபெய்து வருகின்றது. இந்நிலையில் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் ருவாண்டாவில் இடம்பெற்ற மிக மோசமான இயற்கை பேரிடர் பாதிப்பாக இது கருதப்படுகிறது. அண்டை நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருகிறது.

அந்நாட்டிலும் மண் சரிவு காரணமாக ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் ருவாண்டாவில் கனமழை பெய்ய இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version