பள்ளியில் துன்புறுத்தப்பட்டதால் 12 வயது அமெரிக்க சிறுமி தற்கொலை

12 வயது சிறுமி ஒருவர் பள்ளி ஆண்டு முழுவதும் இடைவிடாத கொடுமைகளை தாங்கி தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
லாஸ் வேகாஸில் உள்ள Duane D. Keller Middle School இல் ஆறாம் வகுப்பு படித்து வந்த Flora Martinez கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளார்.
அவரது தாயார், ஆலிஸ் மார்டினெஸ், “என் மகள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்று பாருங்கள். என் மகள் உண்மையில் கொடுமைப்படுத்தப்பட்டாள்.”
“அவளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கடமை பள்ளிக்கு இருப்பதாக நான் உணர்கிறேன், அனால் அதில் அவர்கள் தோல்வியடைந்தனர்” என்று தெரிவித்தார்.
12 வயது சிறுமியை நடுநிலைப் பள்ளியில் இருந்து மாற்றுவதற்கான ஆவணங்களை அவரது தாயார் சமர்ப்பித்துள்ளார், ஆனால் அந்த கோரிக்கை கடந்த ஆண்டு அக்டோபரில் நிராகரிக்கப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.
(Visited 22 times, 1 visits today)