இங்கிலாந்தில் வெள்ளத்தில் மூழ்கும் 08 இலட்சம் வீடுகள் : காத்திருக்கும் நெருக்கடி!
2080 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து முழுவதும் 866,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என ஆய்வொன்று எச்சரித்துள்ளது.
கிரீன்பீஸிற்கான ஜியோஸ்மார்ட் நடத்திய புதிய பகுப்பாய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த கணிப்பு, தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட உலக வெப்பநிலை 2.4C அதிகரிப்பதை எடுத்துரைக்கிறது.
ஆய்வின்படி, ஸ்காட்லாந்து அதிக ஆபத்தில் உள்ள பிராந்தியமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 386,716 வீடுகள் ‘அதிக’ அல்லது ‘மிக அதிக’ வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து முழுவதும் சமீபத்திய பரவலான வெள்ளம் மற்றும் புயல்களுக்கு மத்தியில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சுற்றுச் சூழலை மாசுபடுத்துபவர்கள் பணம் செலுத்தவும், உள்ளூர் அதிகாரிகளுக்கு போதுமான நிதியளிக்கவும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மலிவு விலையில் வீட்டுக் காப்பீட்டை அணுகுவதை உறுதி செய்யவும் சுற்றுச்சூழல் குழுக்கள் அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும் வலியுறுத்துகின்றன.





