ஐரோப்பா செய்தி

ரஷ்ய அதிகாரிகள் பிரதமரின் ஒப்புதலுடன் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற முடியும்?

ரஷ்ய உயர் அதிகாரிகள் பிரதமரின் அனுமதியுடன் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற முடியும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.

ரஷ்ய செய்தி நிறுவனமான தி பெல்லின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதன்படி ரஷ்யாவின் பிரதமரான மிஷுஸ்டினின் அனுமதியுடன் மாத்திரம் தான் அதிகாரிகள் வெளியேற முடியும். அதாவது அவர் கையொப்பம் இடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த விதிமுறை விளாடிமிர் புட்டினின் நிர்வாக ஊழியர்களுக்கு கிடையாது என நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிகாரிகள்>  முன்னாள் அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களின் நிர்வாகிகள் ரஷ்யாவிற்கு வெளியே செல்வதை தடுக்க, அவரக்ளின் கடவுச்சீட்டுக்களை ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் பறிமுதல் செய்வதாக கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!