ஐரோப்பா செய்தி

பலத்த காற்றடித்ததால் சாய்ந்த பிரம்மாண்ட படகு: பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..

ஸ்கொட்லாந்திலுள்ள படகுத்துறை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட படகு ஒன்று சாய்ந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 8.35 மணியளவில் பலத்த காற்று வீசியதால், Leith என்னுமிடத்திலுள்ள படகுத்துறை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரிய படகொன்று 45 டிகிரி சாய்ந்துள்ளது.திடீரென படகு சாய்ந்ததில், அதில் இருந்த ஊழியர்க்ள் 10 பேர் காயமடைந்துள்ளார்கள், இரண்டு பேரைக் காணாததால் பதற்றம் உருவாகியுள்ளது.

RV Petrel என்னும் அந்த ஆராய்ச்சிப் படகு, மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான Paul Allen என்பவருக்கு சொந்தமானதாகும்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்புப்பணியில் ஐந்து ஆம்புலன்ஸ்கள், ஹெலிகொப்டர் ஒன்று, மூன்று அவசர உதவிக் குழுக்கள், அவரசர ஆபரேஷன் குழு ஒன்று, மூன்று துணை மருத்துவக் குழுக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வாகனம் ஒன்று ஆகியவை அந்த இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன

(Visited 1 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content