ஐரோப்பா செய்தி

தரையிறங்கும் போது இயங்க மறுத்த முன் சக்கரங்கள்; நெருப்புப் பொறியுடன் தரையிறங்கிய விமானம்!

இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து சென்ற ரையான் ஏர் விமானத்தின் முன்சக்கரம் இயங்காததால் நெருப்புப் பொறி பறக்க அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

லிவர்பூல் நகரில் இருந்து அயர்லாந்தின் டப்ளின் நகருக்கு ரையான் விமானம் புறப்பட்டுச் சென்றது. டப்ளின் விமானநிலையத்தில் தரையிறங்கும் போது, விமானத்தின் முன்சக்கரங்கள் இயங்காதது தெரியவந்தது.

ஆனாலும் விமானி விமானத்தை அவசரமாகத் தரை இறக்கினார். இதனால், நெருப்புப் பொறி பறக்க ஓடுதளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் விமானம் நிறுத்தப்பட்ட பிறகு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதனால் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் விமானத்தை நோக்கிச் சென்றன. அதன் பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.மேலும் இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
See also  உலகின் சிறந்த பீட்சா வழங்கும் இத்தாலிய உணவகங்கள்
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content