இலங்கை செய்தி

தமிழகத்தில் 20 வயதுடைய இலங்கை அகதியின் விபரீத முயற்சி

தமிழகம் தாபதி புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 20 வயதுடைய இலங்கை அகதியொருவர், தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையின்போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்தே கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓவியரான குறித்த இலங்கையர் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமியைப் பழனியிலுள்ள கோவிலொன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகச் சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எட்டயபுரம் பொலிஸார் சம்பந்தப்பட்ட இருவரையும், அவர்களின் பெற்றோரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, இது சம்பந்தமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

அவ்வேளையிலேயே அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!