இலங்கை செய்தி

தனது சேவையை முடித்துக்கொள்ள இந்திய உயர்ஸ்தானிகர் முடிவு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது சேவையை முடித்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மிலிந்த மொரகொட தனது சேவைக் காலத்தை நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிலிந்த் மொரகொட 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

மொரகொட அமைச்சரவை அதிகாரங்களைக் கொண்ட உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதுடன், இலங்கையில் அமைச்சரவை அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட முதலாவது உயர்ஸ்தானிகர் இவரே என்பதும் விசேட அம்சமாகும்.

அவரது பதவிக்காலத்தில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மின்சாரத் திட்டத்தைத் தொடங்குவது உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டது.

மிலிந்த் மொரகொட இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது சிரேஷ்ட ஆலோசகராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content