இலங்கை செய்தி

செட்டிகுளத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலையால் பரபரப்பு!

வவுனியா செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக உள்ள வீதியோரத்தில் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வரும்  குறித்த பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை