சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை – இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிப்பு
சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தென்மேற்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினையால் எக்ஸெட்டரிலிருந்து (Exeter) எக்ஸ்மவுத் (Exmouth), யோவில் (Yeovil) சந்தி மற்றும் பேசிங்ஸ்டோக் (Basingstoke) வரையிலான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
எக்ஸெட்டர் சென்ட்ரல் மற்றும் எக்ஸ்மவுத், எக்ஸெட்டர் மற்றும் ஹொனிடன் இடையேயான ரயில் பாதைகள் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ஏனைய ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





