இலங்கை செய்தி

கொழும்பில் நடந்த கொலை – மன்னாரில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் நயனா வசுலா எதிரிசூரிய  ஆகியோரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மன்னாரிலிருந்து மீன்பிடி படகின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக மன்னாரில் பல இடங்களில் பாதுகாப்பு தரப்பினர் விசேட சோதனைச் சாவடிகளை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேக நபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

என்ற போதிலும், மன்னார் ஊடாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், கொழும்பில் இருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில் பல விசேட சோதனைச் சாவடிகளும் வீதித் தடைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

மேலும், மன்னாரிலிருந்து கடலுக்குச் செல்லும் மீன்பிடி படகுகளில் மீன்பிடி அடையாள அட்டை இல்லாமல் பயணிப்பவர்கள் தொடர்பில் கடற்படை, கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content