செய்தி வட அமெரிக்கா

கொலம்பியாவில் சிறு தீப்பொறியால் வெடித்த சுரங்கம்: பரிதாபமாக உயிரிழந்த 21 தொழிலாளர்கள்!

கொலம்பியா நாட்டில் சுடடெளசாவிலுள்ள ஒரு சுரங்க தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடம் இடித்து 21 தொழிலாளர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று மத்திய கொலம்பியாவிலுள்ள எண்ணெய் மற்றும் நிலக்கரி சுரங்கத்தில், தொழிலாளி ஒருவரது கருவியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியால், வாயுக்கள் தீப்பிடித்து வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.இதில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் குண்டினமார்கா மாகாணத்தின் ஆளுநர் நிக்கோலஸ் கார்சியா, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி முடிந்து விட்டதாக கூறியுள்ளார்.

Explosion

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் “துரதிர்ஷ்டவசமாக இப்போது யாரும் உயிருடன் இல்லை. நாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.மீட்புக் குழுவினர் ஆறு சுரங்கங்களில் சுரங்கத் தொழிலாளர்களைத் தேடியுள்ளனர். சுரங்கங்களில் காற்றோட்டம் சரியாக இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எண்ணெய் மற்றும் நிலக்கரி கொலம்பியாவின் முக்கிய ஏற்றுமதியாகும், அங்கு சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

(Visited 19 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி