இலங்கை செய்தி

கல்கிஸ்சையில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி – சிக்கிய பெண்கள்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸ்சை பிரதேசத்தில் கல்கிஸ்சை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஆயுர்வேத மருத்துவ சேவை வழங்கும் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 45 வயதுடைய வீரகெட்டிய, நீர்கொழும்பு, அம்பலாங்கொடை ஹாலிஎல, பொலன்னறுவை மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

(Visited 14 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!