ஆஸ்திரேலியா செய்தி

எரிசக்தி பாதுகாப்பு ஏற்பாடு: சிங்கப்பூர் பறக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர்!

ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese இரு நாள் பயணமாக நாளை மறுதினம் (9) சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

சிங்கப்பூர் பிரதமர் உட்பட அந்நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடன் அவர் பேச்சு நடத்துவார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான மூலோபாய உறவை மேம்படுத்துவது குறித்தும் தடையற்ற எரிபொருள் வர்த்தகத்தை உறுதி செய்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதனால் ஆஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே பிரதமர் சிங்கப்பூர் செல்கின்றார்.

அதன்பின்னர் மலேசியா செல்வதற்கும் பிரதமர் Anthony Albanese திட்டமிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!