இலங்கை செய்தி

ஈஸ்டர் தாக்குதல் : விசாரணைக்கு வரும் மைத்திரியின் ரிட் மனு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த அறிவிப்பை வழங்கியது.

அதன்படி, இந்த மனு 5 நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 09 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

புலனாய்வு அமைப்புகளிடமிருந்து முன்னறிவிப்புகளைப் பெற்றிருந்தும் பேரழிவைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தி கோட்டை நீதவான் அழைப்பாணை அனுப்பியது.

பின்னர், அழைப்பாணை விடுக்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது எனக் கூறி, அதனை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!