இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இருந்து வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோருக்கு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

முதற்தடவையாக அல்லது பதிவுகளை புதுப்பிக்க இந்த இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.slbfe.lk எனும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் Online Self Registration எனும் பகுதிக்குள் பிரவேசித்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய தரவுகள் தொடர்பான விபரங்களையும் இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 1989 என்ற துரித அழைப்பு இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!