செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவை அழிக்க வட கொரியா செய்துள்ள அதிர்ச்சி செயல்

அமெரிக்காவை அழிப்பதற்காக வடகொரியா அதிர்ச்சி செயலில் ஈடுப்பட்டுள்ளது.

அதற்கமைய, மூன்றே நாட்களில் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து இருப்பதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்ய இருப்பதாக அறிவித்ததது.

இதனை தொடர்ந்து, வட கொரியா தீவிர இராணுவ நடவடிக்கைகளை செய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நடவடிக்கையை குறிப்பிட்டு இது ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பு” என்று குற்றம் சாட்டியது.

அத்துடன்  Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) கொரிய தீபகற்ப கடல் பிராந்தியத்தில் ஏவி எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக ஆயுதமேந்த சுமார் 1.4 மில்லியன் இளைஞர்கள் அந்த நாட்டு ராணுவத்தில் இணைத்து இருப்பதாக வட கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!