இந்தியா செய்தி

அண்ணனும் தங்கையும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சோகம்

சிறிய ஓடையைக் கடக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று (23) மாலை பெய்த கனமழையுடன் வந்த வெள்ளத்தில் இரண்டு குழந்தைகளும் சிக்கி இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

ஹாலியால பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகொட கிராமத்தில் வசிக்கும் இரண்டு குழந்தைகளே போகொட – ஹலம்ப வீதியின் ஊடாக ஓடும் ஓடையில் இந்த விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

10 வயதுடைய யசிது உமேஸ் சத்சர (சகோதரன்) மற்றும் 08 வயதுடைய தஸ்மி நடிகா (சகோதரி) ஆகியோர் கூலி வேலைக்குச் சென்ற தமது தாயாரைப் பார்த்துக் கொள்ளச் சென்ற போதே இவ்விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க கிராம மக்களுடன் இணைந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி